விஷம் குடித்து முதியவர் தற்கொலை

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-17 18:05 GMT
கரூர்
கரூர் அருகே உள்ள கடம்பன்குறிச்சி தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 68). விவசாயியான இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாய பணியின் போது கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு உள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வந்த அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிதம்பரம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சிதம்பரம் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்