கரூர் அருகே பெண் மாயம்

கரூர் அருகே பெண் மாயம் ஆனார்.

Update: 2021-04-17 18:31 GMT
கரூர் 
கரூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கேசவமூர்த்தி. இவரது மனைவி கஸ்தூரி (வயது 21). டெக்ஸ்டைல் தொழிலாளியான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமானார். இதையடுத்து கேசவமூர்த்தி தனது மனைவியை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகமாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்