குடும்பம் நடத்த மனைவி வராததால் வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை

தற்கொலை

Update: 2021-04-18 17:12 GMT
செஞ்சி, 
செஞ்சி அருகே உள்ள நாகம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன்  பிரபு (வயது 32). இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவருடைய மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து பிரபு தனது மனைவியை சந்தித்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரபு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

மேலும் செய்திகள்