கோட்டூர் அருகே மகளின் கழுத்தை அறுத்த தொழிலாளி கைது

கோட்டூர் அருகே மகளின் கழுத்தை அறுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2021-04-18 17:57 GMT
கோட்டூர், 

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெருகவாழ்ந்தான் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது41). இவர் பெருகவாழ்ந்தான் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுமதி. இவர்களது மகள் சத்யபிரியா(19). செல்வராஜ்- சுமதி தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். சம்பவத்தன்று தன் தாயாரோடு வசித்துவரும் சத்யப்பிரியாவை பெண் பார்க்க வந்து சென்றனர்.

கைது

நேற்று மதியம் சத்யபிரியா தனது தந்தை வசிக்கும் வீட்டுக்கு குடும்ப அட்டை எடுக்க சென்றார். அப்போது செல்வராஜ்- சத்யபிரியா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சத்தியப்பிரியா கழுத்தை அறுத்தார். இதனால் படுகாயம் அடைந்த சத்யபிரியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டு மன்னார்குடி அரசு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்