லாலாபேட்டை அருகே முதியவருக்கு அரிவாள் வெட்டு

லாலாபேட்டை அருகே முதியவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2021-04-18 18:12 GMT
லாலாபேட்டை
லாலாபேட்டை அருகே உள்ள வயலூர் ஊராட்சிக்கு ட்பட்ட திருமேனி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாவி (வயது 65 வயது). இவரது மகன்கள் பெரியசாமி (43), தன்னாசி (37). தன்னாசியின் மகன் முகேஷ். இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் வெளியூர் சென்று விட்டு திருமேனி ஊருக்குள் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது, சாலையின் குறுக்கே மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் அதே பகுதியை வடிவேல் (35) நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்து கொண்டிருந்த அண்ணாவியை வழிமறித்து வடிவேல் அரிவாளால் வெட்டினார். பின்னர் பெரியசாமி, தன்னாசி, முகேஷ் ஆகியோரை கட்டையால் தாக்கினார். இதையடுத்து அண்ணாவி திருச்சி அரசு மருத்துவமனையிலும், பெரியசாமி, தன்னாசி, முகேஷ் ஆகியோர் குளித்தலை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, வடிவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய வடிவேலுவின் மைத்துனர் பிரபுவை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்