ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது

ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-04-18 19:43 GMT
நாகமலைபுதுக்கோட்டை
மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீசார் கீழக்குயில்குடி சமணர் மலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தது. அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் கீழக்குயில்குடி கமல்பாண்டி(வயது 30), கருப்பசாமி(24), மருதுபாண்டி, நிஷாந்த்(27) உள்பட 6 பேர் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்