கம்பைநல்லூரில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

கம்பைநல்லூரில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-19 17:10 GMT
மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் விஜய் (வயது 22). இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட விஜய் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஜய் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கம்பைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரோஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்