அன்னவாசல், ஏப்.20-
அன்னவாசல் அருகே உள்ள பூலாம்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் சரவணன் (வயது 23). இவரும் பரம்பூரை சேர்ந்த பாலு மகன் கணேசன் (19) என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பூலாம்பட்டியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிள் பின்னங்குடி பெரிய கண்மாய் அருகே சென்ற போது, எதிரே வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கணேசன் படுகாயம் அடைந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் திருச்சி மாவட்டம் ஆரியக்கோன்பட்டியை சேர்ந்த யோகநாதன் (28) என்பவரை கைது செய்தனர்.
அன்னவாசல் அருகே உள்ள பூலாம்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் சரவணன் (வயது 23). இவரும் பரம்பூரை சேர்ந்த பாலு மகன் கணேசன் (19) என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பூலாம்பட்டியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிள் பின்னங்குடி பெரிய கண்மாய் அருகே சென்ற போது, எதிரே வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கணேசன் படுகாயம் அடைந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் திருச்சி மாவட்டம் ஆரியக்கோன்பட்டியை சேர்ந்த யோகநாதன் (28) என்பவரை கைது செய்தனர்.