மனைவியை தாக்கிய கணவர் கைது

குடும்ப பிரச்சினையில் மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-04-19 19:18 GMT
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள கோட்டமேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 33). இவரது மனைவி ராஜேஸ்வரி (33). இவர்களுக்குள் குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த ராஜேஸ்வரியை அவரது கணவர் சங்கர் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் வி்டுத்துள்ளார். இதில் காயமடைந்த அவர் தனது தாயார் வசந்தா உதவியுடன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்ந்து முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைகாக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராஜேஸ்வரி ெகாடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த குளித்தலை போலீசார் சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்