லாரி டயர்கள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

லாரி டயர்கள் திருடப்பட்டுள்ளது

Update: 2021-04-19 19:35 GMT
கரூர்
கரூர் ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் யோகானந்த் (வயது 30). இவருக்கு சொந்தமான லாரி ஒன்று கரூர்- மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பட்டறை ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் லாரியில் இருந்த 6 டயர்களை கழற்றி மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். இதுகுறித்து யோகானந்த் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழிலரசன் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்