தலைவாசல் அருகே விபத்தில் பெண் பலி

விபத்தில் பெண் பலி

Update: 2021-04-19 22:44 GMT
தலைவாசல்:
தலைவாசல் அருகே புனல்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). இவருடைய மனைவி ராஜேஸ்வரி (45). இவர்களுடைய மகள் ரம்யா (23). இவர்கள் 3 பேரும் ஒரே மொபட்டில் புனல் வாசலில் இருந்து மணிவிழுந்தான் கிராமத்துக்கு சென்றனர். மணிவிழுந்தான் பஸ் நிறுத்தத்தில் அவர்கள் மொபட்டில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியே வந்த கார் மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. 
இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். இவர்களில் ராஜேஸ்வரி மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இந்த விபத்து குறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்