கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாஸ்மாக் விற்பனையாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-04-20 18:03 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் சரவணன். இவர் ராமநாதபுரம் கேணிக்கரை டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார் இவர் மாணவிக்கு கடந்த 2 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிடம் மாணவி புகார் அளித்தார். இதன் அடிப்படையில் உத்திரகோசமங்கை போலீசார் வழக்கு பதிவு சரவணனை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்