3 பேருக்கு கொரோனா தொற்று

பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-04-20 20:45 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் இதுவரை 2,413 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 2 ஆயிரத்து 338 பேர் அதில் இருந்து மீண்டுள்ளனர். 53 பேர் பெரம்பலூர், அரியலூர், திருச்சி நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்றுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை மூலம் 29 ஆயிரத்து 589 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்