இரவு நேர ஊரடங்கு அமல்: திருவாரூரில் இருந்து வெளியூர்களுக்கு கடைசி பஸ் இயக்கப்படும் நேர விவரம் அறிவிப்பு

திருவாரூரில் இருந்து வெளியூர்களுக்கு கடைசி பஸ் இயக்கப்படும் நேர விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-21 18:04 GMT
திருவாரூர், 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இதன் காரணமாக இரவு முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பஸ் போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடைசி பஸ்கள்

இரவு நேர ஊரடங்கு காரணமாக திருவாரூரில் நேற்று இயக்கப்பட்ட பஸ்களில் கூடடம் குறைவாக காணப்பட்டது. திருவாரூரில் இருந்து வெளியூர்களுக்கு கடைசியாக இயக்கப்படும் பஸ்களின் நேர விவர அட்டவணை புதிய பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருவாரூரில் இருந்து கும்பகோணம் மார்க்கத்திற்கு இரவு 8.30 மணிக்கும், தஞ்சை மார்க்கத்திற்கு 8.45 மணிக்கும், மயிலாடுதுறை மார்க்கத்திற்கு இரவு 8.45 மணிக்கும், நாகப்பட்டினம் மார்க்கத்திற்கு இரவு 9 மணிக்கும் கடைசி பஸ் இயக்கப்படுகிறது.

மன்னார்குடி

திருத்துறைப்பூண்டி மார்க்கத்திற்கு இரவு 9 மணிக்கும், மன்னார்குடி மார்க்கத்திற்கு இரவு 9 மணிக்கும் கடைசி பஸ் இயக்கப்படும் என போக்குவரத்து கழகத்தின் கிளை மேலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்