அரசு அதிகாரி வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

அலங்காநல்லூர் அருகே அரசு அதிகாரி வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை போனது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Update: 2021-04-21 19:34 GMT
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அருகே அரசு அதிகாரி வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை போனது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
50 பவுன் நகை
அலங்காநல்லூர் அருகே மேல சின்னம்பட்டியை சேர்ந்தவர் கணேசன்(வயது 50). இவர் திருச்சி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். 
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்தது. பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.15 ஆயிரமும் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். 
விசாரணை
இதுபற்றி அலங்காநல்லூர்  போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 
மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்