இரவு நேர ஊரடங்கால் பெரம்பலூரில் சாலைகள் வெறிச்சோடின

இரவு நேர ஊரடங்கால் பெரம்பலூரில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2021-04-21 21:10 GMT
பெரம்பலூர்:

வெறிச்சோடின
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும் என்பதால் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள் இரவு 9 மணிக்கு முன்னதாகவே மூடப்பட்டதால், கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால் பெரம்பலூர் பஸ் நிலையங்களில் சில கடைகள் 10 மணிக்கு மேலும் மூடப்படாமல் இருந்தன.
இரவு நேர ஊரடங்கில் அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்கள் இயங்க அனுமதி இல்லாததால், பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு 9.30 மணிக்கு மேல் வாகன போக்குவரத்து இல்லாமல் சாலைகள், பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு நேர ஊரடங்கை மீறி வெளியில் நடமாடியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு வாகனங்கள் இயங்குவதற்கு போலீசார் அனுமதி அளித்தனர். மருத்துவமனைகள், மருந்தகங்கள் 24 மணி நேரமும் இயங்கின.

மேலும் செய்திகள்