புகளூர் ரெயில் நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு
புகளூர் ரெயில் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
நொய்யல்
கரூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் சுகாதார ஆய்வாளர் வீரமணி மற்றும் காகித ஆலை துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் கொண்ட குழுவினர் புகளூர் ரெயில் நிலையம், அலுவலகம், ரெயில் நிலைய வளாகம், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க கிருமிநாசினி தெளித்தனர்.