தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கல்லிடைக்குறிச்சியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-23 21:23 GMT
அம்பை:
கல்லிடைக்குறிச்சி செம்பத்தி மேடு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 42). கூலித்தொழிலாளியான இவருக்கு கோமதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இவரது மூத்த மகள் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த ரவி நேற்று முன்தினம் இரவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்