சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2021-04-24 19:52 GMT
எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள பழமைவாய்ந்த கைலாசநாதர் கோவிலில் மகா சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது. இதேபோல் உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பின்னர் ரிஷப வாகனத்தில் சாமி எழுந்தருளி உள் மண்டப பிரகாரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதே போல காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்திபெருமானுக்கு சிறப்பு அபிேஷகமும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்