மாயமான தாய்- மகன்கள் மீட்பு

மாயமான தாய்- மகன்கள் மீட்கப்பட்டனர்.

Update: 2021-04-24 22:18 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரை சேர்ந்தவர் வேலுச்சாமி(வயது 30). எண்ணெய் வியாபாரி. இவரது மனைவி தமிழரசி(25). இவர்களுக்கு ஹரிஷ் (6), ஜஸ்வந்த் (5) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 10-ந் தேதி வீட்டில் இருந்த தமிழரசி மற்றும் அவருடை மகன்களை காணவில்லை. இது குறித்து வேலுச்சாமி வி.களத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசியையும், அவருடைய மகன்களையும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் தேவனாம்பட்டி பகுதியில் அவர்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நேற்று தமிழரசி மற்றும் அவரது மகன்களை மீட்டு வி.களத்தூருக்கு அழைத்து வந்தனர். மேலும் அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்