அரியலூரில் மேலும் 33 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,311 ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஏற்கனவே 51 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 4,989 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 271 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.