பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-04-25 14:50 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டி செட்டியார் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 65). 

இவர் நேற்று முன்தினம் தனியார் பஸ்சில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருந்து பள்ளப்பட்டிக்கு வந்தார். 

அவர் பள்ளப்பட்டியில் இறங்குவதற்கு முன்பு பஸ் புறப்பட்டது. உடனே அவர் கவுண்டன்பட்டி பிரிவு அருகே பஸ்சை நிறுத்தும்படி கூறினார். 

அங்கு பஸ் நின்றதும் பழனிச்சாமி இறங்கி கொண்டிருந்தார். 

அப்போது பஸ் புறப்பட்டதில் அவர் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. 

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்