புஷ்பவனேசுவரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

திருப்புவனத்தில் உள்ள புஷ்பவனேசுவரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2021-04-25 17:04 GMT
திருப்புவனம்,

திருப்புவனத்தில் உள்ள புஷ்பவனேசுவரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. அதன்பிறகு புஷ்பவனேசுவரர், சவுந்திரநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோவில் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதே போல பாகனேரி சிவன் கோவிலிலும், சொக்கநாதபுரம் சிவன் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்