வள்ளியூர், ராதாபுரம் பகுதியில் மேலும் 60 பேருக்கு கொரோனா

வள்ளியூர், ராதாபுரம் பகுதியில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-04-25 20:47 GMT
வள்ளியூர், ஏப்:
வள்ளியூர் மற்றும் ராதாபுரம் வட்டார பகுதிகளில் தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று வள்ளியூர், ராதாபுரம் வட்டாரத்தில் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட 22 பேர், வள்ளியூரில் 11 பேர், பணகுடியில் 4 பேர், ஆவரைகுளத்தில் 3 பேர், காவல்கிணற்றில் 2 பேர் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த மொத்தம் 60 பேர் அடங்குவர்.

மேலும் செய்திகள்