மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-25 21:12 GMT
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் கோவிந்தபுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கோவிந்தபுத்தூரில் இருந்து முத்துவாஞ்சேரி நோக்கி வந்த 2 மாட்டு வண்டிகளை மறித்து சோதனை செய்ய முயன்றனர். இதனால் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த 2 பேர், வண்டிகளை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார், மாட்டு வண்டிகளை சோதனையிட்டபோது, அவற்றில் கோவிந்தபுத்தூர் கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து முத்துவாஞ்சேரி பகுதிக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்