பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பாவூர்சத்திரம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-25 21:14 GMT
பாவூர்சத்திரம், ஏப்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழஅரியப்பபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கல்லுத்தியான். இவருடைய மனைவி பேராட்சி செல்வி (வயது 30). பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு பிரம்மராஜேஸ்வரி (7) என்ற மகளும், முகேஸ் (4) என்ற மகனும் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனமுடைந்த பேராட்சி செல்வி நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார் விரைந்துசென்று பேராட்சி செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்