பெண் தீக்குளித்து தற்கொலை

பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-26 15:36 GMT
ஸ்ரீவைகுண்டம்:
ஆழ்வார்திருநகரி அருகே உள்ள சொக்கனூர் கவுசிக் நகரை சேர்ந்தவர் சேகர். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சிவசங்கரி (வயது 35). கடந்த 5 வருடத்துக்கு முன் சிவசங்கரிக்கு கர்ப்பப்பையில் ஆபரேஷன் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் சில மாதங்களாக அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.நேற்று அவருக்கு வயிற்று வலி அதிகமாக இருந்ததால் அழுது துடித்துள்ளார். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து ஆழ்வார்திருநகரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்