பழக்கடையை உடைத்து பணம் திருட்டு

திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Update: 2021-04-26 20:14 GMT
மதுரை
மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்தவர் சரவணமுருகன்(வயது 41). இவர் எச்.எம்.எஸ்.காலனியில் பழக்கடை வைத்திருக்கிறார். சம்பவத்தன்று இரவு இவர் கடையை பூட்டி விட்டு மறுநாள் காலை வந்தார். அப்போது கடையின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 4 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்