கார் மோதி வாலிபர் பலி

கார் மோதி வாலிபர் ஒருவா் உயிரிழந்தாா்.

Update: 2021-04-27 16:48 GMT
வேப்பூர், 

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா பூசாரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 33). இவர் சென்னை திருமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் வேலை செய்து வந்தார். 

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு புதிய கட்டுப்பாட்டை தொடர்ந்து  உணவகத்துக்கு விடுமுறை விடப்படடது. இதையடுத்து  சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் பிரகாஷ் புறப்பட்டார். 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த  கழுதூர் அருகே வந்தபோது, அந்த வழியாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பிரகாஷ் சிகிச்சைக்காக  வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்