கொடுத்த பணத்தை திரும்ப கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

கொடுத்த பணத்தை திரும்ப கேட்டவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2021-04-27 18:08 GMT
கந்தர்வகோட்டை, ஏப்.28-
கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆத்தங்கரை பட்டியைச் சேர்ந்தவர் அய்யாவு (வயது 55). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கடன் வாங்கியுள்ளார். இது தொடர்பாக அவர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று  அய்யாவு தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், அவரது மகன் சத்யராஜ் (32) ஆகியோர் சேர்த்து அய்யாவுவை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். இது குறித்து கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் வழக்குப்பதிவு செய்து செல்வராஜ், அவரது மகன் சத்யராைஜ தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்