ஓட்டலுக்குள் புகுந்த ஆட்டோ

ஓட்டலுக்குள் ஆட்டோ புகுந்தது.

Update: 2021-04-27 18:36 GMT
பொன்னமராவதி, ஏப்.28-
பொன்னமராவதி பகுதியை சேர்ந்தவர் சீனி. ஆட்டோ டிரைவரான இவர் காந்திசிலை அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது, திடீரென்று  கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரத்தில் உள்ள ஓட்டலுக்குள் புகுந்தது. இதில் டிரைவர் சீனி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆட்டோவையும், சீனியையும் மீட்டனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்