விபத்தில் காவலாளி பலி

விபத்தில் காவலாளி பரிதாபமாக இறந்தார்

Update: 2021-04-27 18:57 GMT
மேலூர்
மேலூரில் உள்ள கூத்தப்பன்படியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 40). இவர் மேலூர் நான்கு வழிசாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில் அவர் நான்கு வழி சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்