ஆர்.கே. பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சாவு

ஆர்.கே.பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2021-04-28 05:44 GMT
பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஒன்றியம் புத்தேரி கிராமத்தை சேர்ந்தவர் மோகன். கோணி தைக்கும் தொழிலாளி. அவரது வீட்டுக்கு சென்னை புரசைவாக்கம் சூளைமேடு பகுதியை சேர்ந்த உறவினர் தேவேந்திர குமார், அவரது மனைவி பிரியா, மகன்கள் நந்தகுமார் (வயது 15), அஜித் குமார் (13) ஆகியோர் சென்றனர்.

நேற்று காலை நந்தகுமார் தனது தம்பி அஜித் குமார் மற்றும் சில சிறுவர்களுடன் சேர்ந்து அந்த கிராமத்தில் உள்ள பெருமாள் என்பவரது விவசாய கிணற்றில் குளிக்க சென்றான். குளித்து முடித்து வரும்போது நந்தகுமார் கால் தவறி மீண்டும் கிணற்றில் விழுந்தான்.

சாவு

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் உடனடியாக அங்கு இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் சோளிங்கர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பல மணி நேரம் போராடி சிறுவனின் உடலை மீட்டனர். இது குறித்து ஆர்.கே. பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்