குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது

Update: 2021-04-28 16:58 GMT
சோழவந்தான்
சோழவந்தான் அருகே சித்தாதிபுரம் கிராமம் அருகே ரோட்டோரமாக மதுரை மாநகராட்சி குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் உடைந்து மன்னாடிமங்கலம் முதல் கண்ணுடையாள்புரம் வரை 3 இடங்களில் தண்ணீர் வீணாகிறது. இதில் வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள வயலுக்குள் செல்கிறது. இதனால் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்