சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர்

தி.மு.க. சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Update: 2021-04-28 19:32 GMT
நெல்லை, ஏப்:
நெல்லை டவுன் நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டில் தி.மு.க. சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்கள், வியாபாரிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. ராமகிருஷ்ணன் என்ற அன்பு தலைமை தாங்கினார். முன்னாள் பகுதி செயலாளர் உலகநாதன் முன்னிலை வகித்தார். நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப், லட்சுமணன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு, சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசங்களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் நயினார்குளம் மார்க்கெட் தலைவர் செல்வகுமார், செயலாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்