காளையார்கோவில் அருகே உள்ள கருங்குளம் கிராமத்தை அடுத்த தனிவீரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு சாலினி (வயது 5), ஜனனி (4) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். நேற்று முன்தினம் மதியம் பக்கத்துவீட்டு குழந்தைகளுடன் இவர்கள் இருவரும் தூக்கு வாளியில் தண்ணீர் எடுப்பதற்காக ஊருணிக்கு சென்றுள்ளனர். அப்போது தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கி ஜனனி பலியானாள்.இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.