3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா வியாபாரிகள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-04-29 17:52 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள முத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்து வழிவிட்டான் என்பவரின் மகன் முத்தமிழ்செல்வன் (வயது 25). தாதாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டராமன் மகன் மொழிசெல்வம் (23). காணிக்கூர் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி என்பவரின் மகன் மணிகண்டன் (22). இவர்கள் 3 பேரும் கஞ்சா வியாபாரம் செய்ததாக கமுதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் இவர்கள் தொடர்ந்து இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததை தொடர்ந்து இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்தார் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்கண்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 3 பேரும் நேற்று மதுரை மத்திய சிறையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்