லாரி மோதி வாலிபர் பலி

லாரி மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-04-29 18:45 GMT
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மணவாசியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் அசோக்குமார் (வயது 18). சென்டிரிங் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் மாயனூர் வந்துவிட்டு மணவாசி நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தார். மாயனூர் கிளிஞ்சநத்தம் பிரிவு சாலை அருகே சென்ற போது கரூரிலிருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி, மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அசோக்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அசோக்குமார் இறந்தார். இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்