மதுரை
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் முத்துமனம் என்ற கைதி தாக்கப்பட்டு இறந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மூவேந்தர் புலிப்படை சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுவை கலெக்டரிடம் அளித்தனர்.