உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் த.சோழன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாரதிராஜா. இவருடைய மனைவி பொன்னுமணி(வயது 23). இவர்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு தூங்கச்சென்றனர். நேற்று அதிகாலையில் பாரதிராஜா எழுந்து பார்த்தபோது பொன்னுமணியை காணவில்லை. இதையடுத்து அவர், உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் பொன்னுமணி கிடைக்கவில்லை.
இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் பாரதிராஜா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.