கார் மரத்தில் மோதிய விபத்தில் மேலும் ஒரு பெண் சாவு

கார் மரத்தில் மோதிய விபத்தில் மேலும் ஒரு பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-04-30 18:19 GMT
க.பரமத்தி
கோவை மாவட்டம், காளப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). இவரது மனைவி மகேஸ்வரி (55). இந்த தம்பதியின் மகன் பிரதீப் (33). இவர் மும்பையில் உள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்தார். பிரதீப்பின் மனைவி பிரதிபா (31). இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் கோவையில் இருந்து ஒரு காரில் சென்று ஆறுமுகத்தின் 2-வது மகன் வெங்கடேஷ் என்கிற கார்த்திக்கின் திருமண பத்திரிக்கையை திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள உறவினர் ஒருவருக்கு கொடுத்தனர். பின்னர் அதே காரில் 4 பேரும் கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை பிரதீப் ஓட்டி வந்தார். 
சின்னதாராபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது. இந்த விபத்தில் ஆறுமுகம், மகேஸ்வரி, பிரதீப் ஆகிய 3 பேரும் இறந்தனர். பிரதீப் மனைவி பிரதிபா படுகாயம் அடைந்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பிரதிபாவும் பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்