மாவட்டத்தில் ஒரேநாளில் 176 பேருக்கு கொரோனா தொற்று

மாவட்டத்தில் ஒரேநாளில் 176 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-04-30 18:22 GMT
கரூர்
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 84 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். எனினும் நேற்றைய நிலவரப்படி 986 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்