ஆட்டோக்களில் பேட்டரி திருடியவர் கைது

மானூர் அருகே ஆட்டோக்களில் பேட்டரி திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-30 18:46 GMT
மானூர், மே:
மானூர் அருகே உள்ள களக்குடியைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் (வயது 45), சங்கரநயினார். இவர்கள் இருவரும் தனித்தனியாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகின்றனர். சம்பவத்தன்று இரவு இவர்கள் தங்களது ஆட்டோக்களை களக்குடியில் உள்ள ஒரு கோவில் முன்பு நிறுத்தி இருந்தனர். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, அந்த 2 ஆட்டோக்களிலும் இருந்த பேட்டரிகளை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் களக்குடியில் உள்ள கோவிலில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், காரில் வந்த ஒரு நபர் பேட்டரிகளை திருடி சென்றது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில், உக்கிரன்கோட்டையை சேர்ந்த தனசிங் மகன் ராஜாசிங் (35) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்