புதுக்கோட்டையில் ஒரேநாளில் புதிதாக 148 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டையில் ஒரேநாளில் புதிதாக 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-04-30 19:41 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் கொரோனாவின் 2-வது அலை தாக்கம் அதிகமாக உள்ளது. அந்தவகையில் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 718 ஆக அதிகரித்துள்ளது.  இந்தநிலையில் கொரோனா சிகிச்சையில் இருந்து 70 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 744 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 811 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு எண்ணிக்கை 163 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்