நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது

Update: 2021-04-30 19:58 GMT
மதுரை
மதுரை சம்மட்டிபுரம், எச்.எம்.எஸ்.காலனியை சேர்ந்தவர் வெண்ணிலா (வயது 40). இவர் டி.வி.எஸ்.நகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் வெண்ணிலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் சம்மட்டிபுரம், எச்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த பாலா, ரமேஷ் ஆகியோர் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்