குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

புளியங்குடியில் குளத்தில் மூழ்கி வாலிபர் இறந்தார்.

Update: 2021-04-30 20:05 GMT
புளியங்குடி, மே:
புளியங்குடி ரெங்ககருப்பன் தெருவை சேர்ந்தவர் ராமையா. இவருடைய மகன் தங்கம் (வயது 20). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் புளியங்குடியில் உள்ள கோவிந்தபேரி குளத்தில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தங்கம் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், தங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்