கட்டுப்பாடுகளை மீறிய 2 டீக்கடைகளுக்கு அபராதம்
கட்டுப்பாடுகளை மீறிய 2 டீக்கடைகளுக்கு அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
ஊட்டி,
கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்த நிலையில் நேற்று வருவாய் ஆய்வாளர் மகேந்திரகுமார் மற்றும் ஊழியர்கள் ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் உள்ள டீக்கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது 2 கடைகளில் பார்சல் அல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு குடிக்க குவளையில் டீ வழங்கியது தெரியவந்தது. இதனால் அந்த டீக்கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.