சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-04-30 20:31 GMT
ஜெயங்கொண்டம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த மதகளம் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் அய்யப்பன்(வயது 24). இவர் கோவையில் வேலை பார்த்தபோது, அங்கு வேலை செய்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயங்கொண்டம் அருகே உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு வந்த அய்யப்பன், சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து, ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் செய்திகள்