வளர் இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்

திருக்கோவிலூர் அருகே வளர் இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்

Update: 2021-05-01 17:23 GMT
திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சார்பில் விளந்தை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் வளர் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் இன்ஸ்பெக்டர் கிருபா லட்சுமி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் டயானா, வக்கீல் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு இளம் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பேசினார்கள். இதில் வளர் இளம் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஏட்டு கோகிலா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்