மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-05-01 17:28 GMT
அன்னவாசல், மே.2-
அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த 3 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தனர். இதனையடுத்து போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்